ஊரடங்கு கொண்டுவரப்பட்டது என்னவோ கொரோனாக்கிருமி பரவுவதைத் தடுக் கும் நடவடிக்கையாகத்தான்.ஆனால், ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு பல நடவடிக்கைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன.மத்திய அதிகாரக் குவிப்பு, மாநிலங்களுக்கான நிதி மறுப்பு, கார்ப்பரேட்டுக ளுக்குச் சலுகைகள் அறிவிப்பு, வராக்கடன்கள் தள்ளி வைப்பு, புதிய கடன்களைப் பெற்றுக்கொள்ள அழைப்பு, தொழிலாளர் உரிமைச்சட்டங்களில் கைவைப்பு போன்ற வற்றைச் சுட்டிக்காட்டலாம். ஊரடங்குக்காலத்தின் தொடர்ச்சியாக இனி கவனம் செலுத்த வேண்டியது பொருளாதார மீட்சியில்தான் என்று சொல்லத் தொடங்கினார்கள்.அதற்கான ஒரு வழியாக முன் வைக்கப்பட்டிருக்கிற விரிந்த இலக்குதான் தற்சார்பு இந்தியா.இது கொரோனா போராட்டம் கற்றுக்கொடுத்தி ருக்கிற பாடம் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்படியானால் கொரோனா? அதுதான் கொரோனா வோடு வாழப்பழகிக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை சொல்லத் தொடங்கிவிட்டார்களே! கொரோனாவோடு வாழப்பழகுதல், தற்சார்புப் பொருளாதாரத்தைக் கட்டுதல் என்ற இரண்டையும் பற்றிய கருத்தாக்கங்களைச் சில கருத் தாளர்கள், சில வல்லுநர்கள், சில சமூக ஆர்வலர்கள், சில பத்திரிகையாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.அவர்க ளில் பலருடைய நோக்கம் பொதுநன்மை சார்ந்ததே.இப்போது அதிகார அறைகளிலிருந்தே இக்கருத்துகள் வருகின்றன.
தற்சார்பின் முதல்படி
கிருமியோடு வாழத் தயாராவது ஒருபுறமிருக்க, தற்சார்புப் பொருளாதாரத்தை நிலைநாட்ட மக்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் கூடவே வருகிறது. தியாகம் செய்வதற்கு மக்களிடம் என்ன இருக்கிறது – ஏக்கங்களைத் தவிர? சின்னச்சிராய்ப்பு கூட ஏற்பட்டுவிடாமல் கார்ப்பரேட்டுகள் பாதுகாப்பாக இருக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்துவிட்டு, மக்களுக்குத் தியாகத்தைப் போதிப்பதை என்னவென்பது? எல்லா நாடுகளும் உலகத் தொடர்புகளைப் பராமரித் தாக வேண்டியுள்ளது என்றாலும், எந்தவொரு நாடும் தற்சார் போடுதன்னிறைவடைய முயல்வதைக் குறைத்து மதிப்பிடு வதற்கில்லை.தற்சார்புப் பொருளாதாரத்தைக் கட்டுவது குறித்துச் சுதந்திர இந்தியா பிறந்ததிலிருந்தே பேசப்பட்டு வந்திருப்பதால் அது புத்தம்புதிய கருத்தாக்கமும் இல்லை. அது ஒரு சரியானகொள்கை என்பதையும் மறுப்பதற் கில்லை.நாட்டு மக்கள் அதற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பார்கள்.ஆனால் அது லட்சிய நேர்மையையும், வழிமுறை நியாயங்களையும் பொறுத்தது.
சுதந்திர இந்தியாவின் தற்சார்புக் கனவை நிறை வேற்றுகிற வழிமுறையாகத்தான், அன்று அமெரிக்க அரசு உள்ளிட்ட மேற்கத்திய உலகம் உதவ முன்வராத நிலை யில், இங்கே பொதுத்துறை நிறுவனங்கள் வளர்க்கப் பட்டன. இரும்பு, நிலக்கரி, கனிமம், மின்சாரம், எண்ணெய், இயற்கை வாயு, நாடு தழுவிய ரயில் சேவை, தொலைத் தொடர்பு இன்னபிற அடிப்படையான தொழில்கள் பொதுத் துறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டன.படிப்படியாக உலக அரங்கில் இந்தியா ஈடுகொடுத்து நிற்பதற்கு இட்டுச் சென்றது பொதுத்துறைதான்.மைய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய தொழில்கள் மக்களின் சொத்தாக இருப்பது தற்சார்புக்கான முதல் படி.தற்சார்பைக் கட்டு வதில் அனைத்து சமூகத்தினரின் பங்கேற்பு தலையாயது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கான வேலை வாய்ப்புகளையும், பொதுச்சமூக அங்கீகாரத்தை யும் உறுதிப்படுத்தியது அதே முதல்படிதான்.
மாற்றப்பட்ட அணுகுமுறை
ஆனால், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தள வாடங்கள் உற்பத்தியில் தனியார் நுழைவதற்கான கதவில் 74 சதவீதத்தை மோடி அரசு திறந்துவிட்ட பிறகு முதலில் இடித்துத் தகர்க்கப்படுவது அந்த முதல் படியல்லவா? இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய அனு மதிக்கப்பட்டதே, அது என்னாகும்? பாதுகாப்புத் தொழில் களத்தில், இந்தியாவின் பெருமைக்குரியதொரு பொ துத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனம் அனுப்புகிற ரஃபேல் போர்விமானங்களைத் தானே தயாரிக்கும் என்ற முந்தைய ஒப்பந்தத்தைக் காலாவதியாக்கி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை அங்கே புகுத்தி னார்களே அது என்னாகும்? அம்பானி கம்பெனி இந்திய நிறுவனம் என்பதால் அது தற்சார்புக்கான விளக்கமாக்கப் படும், வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படாததால் ரஃபேல் போன்ற ஏற்பாடுகள் விளக்கமின்றியே தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
இடதுசாரிகளின் எதிர்ப்பு
தற்சார்புக்கு எதிரானது என்று கூறி உலகமயமாக்கலை எதிர்த்த இடதுசாரிகள் இப்போது இதைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிலர் கூறு கிறார்கள்.உலகமயமாக்கல் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது. உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளும், கொடுக்கல் வாங்கல்களும், இங்கே இல்லாதவற்றை அங்கேயிருந்து வரவழைப்பதும், அங்கே தேவைப்படுப வற்றை இங்கேயிருந்து அனுப்புவதுமான உறவுகள் முதல் அம்சம்.அதை இடதுசாரிகள் வரவேற்றார்கள்.உலகமய மாக்கலின் பெயரால் அந்நியப் பன்னாட்டு நிறுவனங்க ளின் சந்தை ஆக்கிரமிப்புக்கு இங்கேயும் கதவு திறந்து விடப்பட்டதைத்தான் எதிர்த்தார்கள்.சிறிய, நடுத்தர உள்நாட்டு நிறுவனங்கள் கைவிடப்பட்டதைத்தான் எதிர்த் தார்கள்.
எடுத்துக்காட்டாக, இங்கே செல்போன் இல்லாதிருந்த நிலையில் அதை ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கே வந்து தயாரித்ததை வரவேற்றார்கள். ஆனால் அந்த செல்போன் களை ஷோரூமில் வைத்து அவர்களே விற்பனை செய்வதை எதிர்த்தார்கள்.
முக்கியக் கேள்விகள்
சந்தை ஆக்கிரமிப்பு அரசியல் அகற்றப்பட்ட உலகத் தொடர்புகள் எப்போதும் தேவை.நாடுகள் ஒன்றை யொன்று சார்ந்திருப்பது நிச்சயமாகத் தேவை.கல்வி, விளையாட்டு, கலை, வேலைவாய்ப்பு இவற்றோடு வணிகம் சார்ந்த சார்புகளும் தேவை.ஆகவே எந்த நாடானாலும் எந்த அளவுக்கு அந்த உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி முக்கியமானது.கல்விப் பரி மாற்றத்தின் பெயரால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கடைபோட அனுமதிக்கிற கொள்கையை வைத்தி ருக்கிறபோது தற்சார்பின் அளவு என்ன என்ற கேள்வியும் முக்கியமானது. இவற்றையெல்லாம் விட முக்கியமானதொரு கேள்வி– தற்சார்புக் கொள்கை இங்கே தனிப்பெரும் வெற்றியைப் பெறுமா?அவநம்பிக்கையிலிருந்தோ அர சியல் எதிர்ப்பிலிருந்தோ அல்ல, அனுபவச்சான்றிலிருந்து வருகிற கேள்வி இது.
மோடியின் முந்தைய சுற்று ஆட்சியில், “இந்தியாவில் தயாரியுங்கள்” (மேக் இன் இந்தியா) என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அது எடு படாமல் போனது ஏன்?அவர்கள் வரவில்லை என்பதற்காக, இந்தியப் பெருமுதலாளிகள் இங்கேயே தயாரிப்பதில் முதலீடு செய்வார்களா? அவர்களுக்காக எவ்வளவு “ஸ்டி முலஸ் பேக்கேஜ்” (ஊக்க நிதித்திட்டங்கள்)வகுத்துக் கொடுத்தாலும், தொழிலாளர் சட்டங்களை எவ்வளவு வளைத்துக்கொடுத்தாலும் முதலீட்டைக் கொட்டுவார்களா? அவர்கள் விரும்பினாலும் ஓரளவுக்கு மேல் முடியாது.காரணம் உள்நாட்டிலேயே முதலீடு செய்து உற்பத்தி செய்கிற பொருள்களை அவர்கள் எங்கே கொண்டுபோய் விற்பார்கள்?கொரோனா காலத்துப் படிப்பினை என்று எல்லா நாடுகளும் இப்படி முடிவெடுத்தால்?அப்போது சமா ளித்து நிற்கத் தேவையான உள்நாட்டுச் சந்தையை உருவாக்கிவிட முடியுமா? குறிப்பாக இந்தியப்பொருள்க ளுக்குத் தங்களுடைய சந்தையைத் திறந்துவிட்டுள்ள நாடு கள், தங்களுடைய தற்சார்புக்காக இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்குமானால் இந்தியப் பொருள்கள் என்னவாகும்?
உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கான நுகர்வுத் தேவையை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள்.தேவை கள் விரிவாகவே இருக்கின்றன.அடையும்பாதைகள்தான் சுருங்கிப்போயிருக்கின்றன.அந்தப் பொருள்களை வாங்குகிற சக்தி உள்ளவர்களே திரும்பத்திரும்ப அவற்றை வாங்கிக்கொண்டிருக்க முடியுமா?அவர்களுடைய வருவா யில் வெட்டு விழுகிறபோது, ஏற்கெனவே வாங்கிக்கொண்டி ருப்பதும் சுருங்காதா?அவர்களையும் புலம்பெயர் தொழி லாளர்களோடு ஒப்பிடுகிற நிலைக்குத் தள்ளுகிறபோது அவர்களுடைய நுகர்பொருள்விருப்பம் ஆவியாகி விடாதா?
நுகர்வோர் என்போர்…
பொருளாதார மீட்சிக்கான தவிர்க்க முடியாத ஏற்பாடு என்று தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப் படுகின்றன.ஏற்கெனவே எண்ணற்ற புலம்பெயர் தொழி லாளர்கள் சொந்த ஊர்களுக்கு மறுபெயர்ப்புச் செய்யப் பட்டுவிட்டார்கள்.அடுத்து, நிர்வாகங்கள் சமூகவிலகலைச் சாக்கிட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.அதனால், உள்ளே வரவிடப் படும் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறது.குறைந்தபட்ச ஊதியப் பாதுகாப்பு உள்பட எதிலும் அரசு தலையிடாது என்பதற்கான அவசரச் சட்டங்களில் தீவிரம் காட்டப்படுகிறது. அண்மையில் கூட, நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு ஊரடங்குக் காலத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற முந்தைய ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது.
காக்கிச் சீருடையும் கையில் ஸ்பானருமாய் வியர்வை சிந்துகிறவர்கள் முதல், ஐ.டி.செக்டார் கண்ணாடி மாளிகைக் கணினிகளில் சிந்தனையைச் செலுத்துகிறவர்கள் வரையில் அத்தனை பேருக்கும் அவசரச் சட்டங்கள் நிச்சய மற்ற எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளன.சென்ற ஆண்டு மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிந்தபோது, ஐ.டி. ஊழி யர்களின் வேலைகள் நிலைத்திருக்கும் என்ற உத்தரவா தம் இல்லாமல் போனதால் அவர்கள் இன்று கையிலிருக்கும் பணத்தை நாளைய உயிர்வாழ்வுக்கான கட்டாயத்தேவைக ளுக்குச் செலவிடுவார்களா, அல்லது வாகனங்கள் வாங்கு வார்களா என்ற கேள்வியை சமூக அக்கறையாளர்கள் எழுப்பினார்கள். அரசு அப்போது பதில்சொல்லவில்லை. இப்போதும் அதே கேள்வி, அதே மௌனம்.
வெளிநாட்டு நிறுவனங்களின் சரக்குகளானாலும் சரி, உள்நாட்டுத் தயாரிப்புகளானாலும் சரி, அவற்றின் நுகர்வோ ரில் மிகப் பெரும்பாலோர் இப்படிப்பட்ட உடலுழைப்புத் தொழிலாளர்களும் மூளையுழைப்புத் தொழிலாளர்களும் தான். அவர்களுடைய வாங்கும் சக்தியைப் பறித்துவிட்டு எப்படி அவர்களுடைய நுகர்வை அதிகரிப்பது? அவர்களுடைய நுகர்வு அதிகரிக்காமல் யாரிடம் விற்பது? கார்ப்பரேட்டுகளுக்குப் பிரச்சனை இல்லை, அவர்கள் தேங்கி நிற்கிறபோதெல்லாம் ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் வரக்கூடும்.அவர்களை நம்பி வேலைக்குச் சேர்ந்தவர்கள்? வாழ்க்கைக் களத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு: ஒரு வட்டாரத்தில் சில தொழில்நிறுவனங்கள் உருவாகின்றன என்றால் அங்கே அந்த நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை விற்கிற சிறு குழுமங்கள் தோன்றும். தேநீர்க்கடை, உணவகம், நுகர்பொருள் விற்பனையகம், ஆடையகம், இரு பாலருக்குமான முடிதிருத்தகம், மருந்த கம் என்று பல தொழில்கள் முளைக்கும்.இவற்றை நடத்து கிறவர்களும் வேலை செய்கிறவர்களும் மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் சென்று தங்களுக்கான தேவைகளை வாங்குவார்கள்.
அந்த மைய நிறுவனங்களில் தொழிலாளர்கள் குறை கிறபோது?இவர்களுடைய வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள் என்பதால் வருவாய் வற்றிப்போகும், மால்க ளுக்குப் போவதை நிறுத்திக்கொள்வார்கள்.அந்த மால்களில் தற்சார்போடு உற்பத்திசெய்யப்பட்ட பொருள் கள் தேங்கிக்கிடக்கும்.பிறகு எப்படிக் கட்டுவது தற்சார்புப் பொருளாதாரத்தை? தற்போது கடைப்பிடிக்கப்படுவது சமூக விலகல் தானேயன்றி, சமூகச் சிந்தனை விலகலல்ல. ஆட்சிபீடத்தி னர் மேற்படி கேள்விகளை விலக்கிவைக்காமல், பழிகளி லும் பகடிகளிலும் நேரத்தைக் கடத்தாமல் சரியான பதில் தேட முயலட்டும்.